Friday, 17th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செங்கல்பட்டில் ஆட்டோ ஓட்டுநர் சங்க செயற்குழு கூட்டம்

ஜுலை 14, 2019 07:23

செங்கல்பட்டு: செங்கல்பட்டு தனியார் மண்டபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சங்க செயற்குழுகூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய தலைவர், செயலாளர், பொருளாளர், துணைதலைவர் துணை செயலாளர் ஆகியோர் பேசும்போது  நமது சங்கத்தில் மாத சந்தா10 ரூபாய் பெறுகிறோம்.

இந்த சந்தா தொகையை எந்த சூழ்நிலையிலும் உயர்த்த மாட்டோம் அதேபோல் நம் சங்கத்தில் உள்ள 350 உறுப்பினர்களில் அணைவருக்கும் காப்பீடு வழங்கி பாதிக்கு மேல் அடையாள அட்டை வழங்கிவிட்டோம்.

மீதமுள்ளவர்களுக்கு விரைவில் அடையாள அட்டை வழங்கி விடுவோம் மேலும் ஆட்டோ ஸ்டான்ட் எண்ணை பதிவிட்டு ஆட்டோ ஸ்டிக்கர் வழங்கப்படும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இலவச மனைபட்டா வழங்க கோருவோம் என முடிவுகள் எடுக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அணைத்து உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்